காரியாபட்டி அருகே சமத்துவபுரம் புனரமைப்பு பணி உத்தரவுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பயனாளிகளுக்கு வழங்கினார்

காரியாபட்டி, மே 3: காரியாபட்டி அருகே கல்குறிச்சி ஊராட்சியில் உள்ளது சமத்துவபுரம். இந்த சமத்துவபுரம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால் ஏராளமான வீடுகள் பழுதடைந்துள்ளது. வீடுகளை மராமத்து பணி செய்ய வேண்டும் என சமத்துவபுரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, கல்குறிச்சி சமத்துவபுரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.50 ஆயி

ரமும், பள்ளி கழிப்பறைகள், பெரியார் சிலை அமைத்தல், நுழைவுவாயில் சிரமைப்பு என புனரமைப்பு பணிகள் செய்வதற்கு சுமார் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வேலைக்கான உத்தரவை பயனாளிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிடிஓக்கள் ராஜசேகரன், சிவகுமார், யூனியன் பொறியாளர் சுப்பையா, காரியாபட்டி திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சேகர், ஆத்மா குழு தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: