கீழ்வேளூர், ஏப்.28: நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பொது சுகாதாரத்துறை சார்பில் வட்டார அளவில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்க்கு நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர், துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார துறை துணை இயக்குநர் விஜயகுமார் வரவேற்றார். முகாமை நாகை எம்பி., செல்வராஜ் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தையும், பள்ளி மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடியை வழங்கியும், மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.