திருப்பூர், ஏப். 22: திருப்பூர், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27). பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதுபோதையில் மனைவி சுமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரகாஷின் மனைவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரகாஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.