பவானியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

பவானி, மார்ச் 31:  பவானி போலீசார் காவிரி, பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். புதிய பஸ் நிலையம் அருகே காவிரி ஆற்றங்கரையோரம் நடத்திய திடீர் சோதனையில் பவானி, திருவள்ளுவர் நகர், நல்லப்பன் மகன் சந்திரசேகரனை (46) பிடித்து விசாரித்தனர். அப்போது, குடிப்பதற்காகவும், விற்பனைக்கும் வைத்திருந்த 100 கிராம், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சந்திரசேகரனைக் கைது செய்தனர்.

இதேபோன்று, பவானி பழைய பஸ் நிலையம், காவிரி பாலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பவானி,  மண் தொழிலாளர் முதல் வீதியைச் சேர்ந்த ராசப்பன் மகன் குமார் (25),  பழனிபுரம் மாதேஸ்வரன் மகன் பிரபாகரன் (21),  மேற்கு தெரு, மண் தொழிலாளர் 2வது வீதி, ராஜேந்திரன் மகன் மாணிக்கம் (22),  மேற்கு தெரு, சின்னத்தம்பி மகன் பிரகாஷ் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் விற்பனை செய்ய வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: