விருத்தாசலம் அருகே மாணவியை திருமணம் செய்து கொலை மிரட்டல் கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

விருத்தாசலம், மார்ச் 25: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் அருண்ராஜ். இவர் கடந்த 2012ம் ஆண்டு பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரை திருமணம் செய்து கொண்டு மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி மனைவியை அழைத்துச் சென்றவர் அங்கு அவரை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மனைவியை சமூகத்தைச் சொல்லி திட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அருள்ராஜ் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ, வன்கொடுமை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: