படவட்டம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

போச்சம்பள்ளி, மார்ச் 25: காவேரிப்பட்டணம் ஒன்றியம், சுண்டகாப்பட்டி கிராமத்தில் ₹15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ரேணுகாம்மாள் படவட்டம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதற்காக தென்பெண்ணை ஆற்றில் இருந்து பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். நேற்று காவேரிப்பட்டணம் மோகன்குமார் குருக்களால் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: