சிறுமியிடம் சில்மிஷம் ரவுடி போக்சோவில் கைது

சேலம், மார்ச் 25:  சேலம் பொன்னம்மாப்பேட்டை வடக்கு ரயில்வே லைன்பகுதியை சேர்ந்தவர் பாலாஜி மகன் சிம்ரன்(எ)மோகன்ராஜ்(25). ரவுடியான இவர் மீது அம்மாப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் ரவுடி பட்டியலும் இருக்கிறது. இந்நிலையில் 15வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. கடந்த ஒன்றரை மாதமாக தலைமறைவாக இருந்த அவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: