வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பி மகன்களுடன் இளம்பெண் மாயம்

சேலம் வீராணம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் பாலாஜி (31). இவரது மனைவி கீர்த்திகா (30). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. வைஸ்கான்(6), மதிஸ்வின்(4) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 19ம் தேதி மாலை மகன்களுடன் கீர்த்திகா திடீரென மாயமானார். அவரை பாலாஜி, உறவினர் வீடு என பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், பாலாஜியின் வாட்ஸ்அப்பிற்கு கடிதம் ஒன்றை கீர்த்திகா அனுப்பியிருந்தார். அதில், உங்களுடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்கிறீர்கள். எனது தேவைகளை பூர்த்து செய்து கொடுப்பதில்லை. நான் சாகமாட்டேன். என்னுடைய குழந்தைகளுடன் அனாதை ஆசிரமத்திற்கு செல்கிறேன். நான் தனியாக குழந்தைகளுடன் வாழ்ந்து காட்டுவேன். இதனால் என்னை தேட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த 8பவுன் நகை, ₹75ஆயிரம் ஆகியவற்றையும் கீர்த்திகா எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலாஜி வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள், பெற்றோரிடம் விசாரணை  செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: