வருசநாடு, பிப். 11: கடமலைக்குண்டு பகுதியில் அனைத்து கிராமங்களிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் இலவம் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது இலவம்பஞ்சு சீசன் களை கட்ட தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இலவம் பஞ்சுவின் விலை ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலிகை பவுடர் தயாரிப்புக்கும், பிரியாணிக்கும் மற்றும் மூலிகை மருந்து தயாரிப்புக்கும் இலவம் பிஞ்சு சேகரிக்கும் பணியில் மலைக் கிராம பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடமலை மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு உற்பத்தி அதிக அளவில் தொடங்கியுள்ளது.