தஞ்சை, பிப்.12: தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 2 ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.தஞ்சை அருகே பர்மா காலனியில் முன்விரோதம் காரணமாக ரவுடிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து முக்கிய ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலமானது. இதையடுத்து எஸ்.பி.ரவளிப்ரியா உத்தரவின்பேரில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர்கள் உமாசங்கர், கௌதம், அருண்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 2 ரவுடிகளை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து பட்டாகத்தி மற்றும் அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.