கும்பகோணம், பிப்.2: கும்பகோணம் அருகே பாபநாசம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பாபநாசம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பெருமாங்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலம். இவர் கடந்த 1957 முதல் 1962 வரை எம்எல்ஏ வாக பணியாற்றியவர். இவருடைய மகன் நடராஜன் (63). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இவருக்கு பாபநாசம் அருகே பெருமாங்குடி குடியான தெருவில் வீடு உள்ளது. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று அங்குள்ள அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெருமாங்குடியில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.