டூவீலர் திருடிய வாலிபர் கைது

நல்லம்பள்ளி: தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி சத்யா நகரை சேர்ந்தவர் மாதேஷ் (35). இவர் கடந்த 23ம் தேதி இரவு, வீட்டின் முன்பு தனது டூவீலரை நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து மாதேஷ் அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் செட்டியூரைச் சேர்ந்த ஆனந்தன்(30) என்பதும், அவர் ஓட்டி வந்தது மாதேஷின் டூவீலர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: