திருவேங்கடம் தாசில்தார் பொறுப்பேற்பு

திருவேங்கடம், ஜன.28: திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த சத்தியவள்ளி பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நீதி பரிபாலன பயிற்சி முடித்திருந்த மைதீன் பட்டாணி என்பவர் திருவேங்கடம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தாசில்தார் மைதீன் பட்டாணிக்கு திருவேங்கடம் ஊர் பொதுமக்கள் சார்பாக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் ஊர் நாட்டாமை மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: