விருத்தாசலம், ஜன. 22: கடலூர் மாவட்டத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலம் நகரம் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் அண்டை மாநில பகுதிகளுக்கும் செல்வதற்கான பேருந்து வசதிகள் உள்ளது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு, பேருந்து நிலையத்தை அழகுபடுத்தும் நோக்கமாக, பேருந்துகள் உள்ளே செல்லும் பகுதி மற்றும் வெளியே செல்லும் பகுதிகளில் ஆர்ச்சுகள் மற்றும் சுற்றுச் சுவரை ஒட்டி இரண்டு புறங்களிலும் மண்மேடுகள் அமைக்கப்பட்டு அதில் பூச்செடிகள் வைப்பதற்காக பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.