கல்லிடைக்குறிச்சி அருகே கூலித்தொழிலாளி மர்ம சாவு

அம்பை ஜன.21:  கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பட்டையா மகன் சுடலை (46).  கூலி தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2மகன்களும் உள்ளனர். சுடலைக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி பிரியா தனது  மகன்களுடன் காருகுறிச்சியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று செம்பத்திமேடு பகுதியில் இருந்து  மூலச்சி செல்லும் பாதையில் பனங்காடு பகுதியில் பைக் அருகே  வாயில் நுரை தள்ளிய நிலையில்  மர்மமான முறையில் சுடலை இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: