திருப்பூர், ஜன. 8: திருமணமான 7 மாதத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக என போலீசார் விசாரித்து வருகின்றனர். வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (29). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர்.நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வெள்ளகோவில் தோட்டக் கலை அலுவலகத்தில் உதவி தோட்டக்கலை அலுவலராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நேற்று லோகேஷ் வெள்ளகோவில் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளகோவில் தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.