சேலம்: சேலம் மாநகரில் 96 பள்ளிகளை சேர்ந்த 30,585 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனாவின் புதிய வடிவமாக உருமாறியுள்ள ஓமிக்ரான் தொற்றுவேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 1,61500 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.