மேட்டூர்: மேட்டூர் சப் கலெக்டர் வீர்பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்டான்லி அணையின் பூங்கா மற்றும் அணையை பார்வையிடுவதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது, ஆங்கில வருடப்பிறப்பு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக உள்ளதால், இத்தினங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.