தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை

திட்டக்குடி, டிச. 28: தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஸ்டபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (28ம் தேதி) நடைபெற உள்ளது. திட்டக்குடி தொகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் திட்டக்குடி நகராட்சி வார்டு பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி அமைச்சரிடம் நேரில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: