சிதம்பரம், டிச. 25: சிதம்பரம் நகரில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் கரையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. எம்ஜிஆர் நகர், அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 160 வீடுகளை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எனக்கூறி காலி செய்ய வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. வீடுகளை காலி செய்வதற்கு இப்பகுதி பொதுமக்கள் போதிய கால அவகாசம் கேட்டுள்ளனர். அதனால் கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர்தர் வாண்டையார் தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சியரை சந்தித்தனர். அப்போது மாற்று இடம் கொடுத்துவிட்டுதான் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.