ஒட்டன்சத்திரம், டிச. 24:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலைக்கிராமங்களில் காட்டுயானை, சிறுத்தைப்புலி, மான், காட்டு எருமை, குரங்கு, செந்நாய், மலைப்பாம்புகள் உள்பட ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரப்பலாறு அணை மற்றும் பாச்சலூர், சோழியப்பாறை எஸ்டேட் மற்றும் மயிலாடும்பாறை பகுதிகளில் ஒற்றை யானை மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.