சின்னாளபட்டி, டிச.23: திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விவசாய கடன் திட்டம் மூலம் ஆடு மற்றும் மாடு, கால்நடை வளர்ப்போர், மீன் வளர்ப்போர், கோழி வளர்ப்போர் உட்பட பல்வேறு பணிகளை செய்யும் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்காக கூட்டுறவு சங்க செயலாளர்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன், ஆவின் பொது மேலாளர் தியானேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் ஆனந்தி வரவேற்று பேசினார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒன்றிய தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சிவகுருசாமி பேசினார்.