உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர்,டிச.21: திருப்பூர் டவுன்ஹால் அருகே குமரன் வணிக வளாகத்தில் திருப்பூர் மாவட்ட உள்ளூர் திட்ட குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்தனர். அவர்களை கலெக்டர் வினீத் வரவேற்றார். அலுவலக ஊழியர்களிடம் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை கேட்டு அமைச்சர்கள் பார்வையிட்டார். இதுபோல் நகர் ஊரமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டனர். அமைச்சர்களிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதனை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹித்தேஷ் குமார் மக்வானா, நகர் ஊரமைப்பு இயக்குனர் சரவணவேல் ராஜ், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், பனியன் தொ.மு.ச. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் ந.தினேஷ்குமார் மற்றும் திலக்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: