உளுந்தூர்பேட்டை, டிச. 21: உளுந்தூர்பேட்டையில் உள்ள பழமையான காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் நேற்று காலை ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜெகதீச குருக்கள் தலைமையில் மகா தீபா ராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதேபோல் உளுந்தாண்டார்கோவில் பகுதியில் உள்ள மாஷபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் துரைசாமி குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.