வருசநாடு, டிச.20: வருசநாடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். வருசநாடு அருகே பண்டாரவூத்து மலைப்பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வருசநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதியில் உள்ள முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.