புதுச்சேரி, டிச. 15: புதுச்சேரியில் புதிதாக 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 2,543 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-21, காரைக்கால்-1, மாகே-2 பேர் என மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை. மேலும், புதுச்சேரியில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,878 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. இதுவரை 20,14,218 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 17,09,361 நெகட்டிவ் என முடிவு வந்துள்ளன.