க.பரமத்தி, டிச. 14: சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.109க்கு ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நேற்று கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 290 மூட்டை கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.