விக்கிரவாண்டி, டிச. 11: விக்கிரவாண்டி டோல்கேட்டை கடக்க முயன்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.பெரம்பலூர் மாவட்டம் கொளப்பட்டியை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (41). இவர் நேற்று முன்தினம் வெளிநாட்டிற்கு சென்ற தனது உறவினரை சென்னை ஏர்போர்ட்டிற்கு சென்று வழி அனுப்பிவிட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். காலை 11.30 மணியளவில் விக்கிரவாண்டி டோல்கேட்டை கார் கடக்க முயன்ற போது என்ஜின் முன்புறம் திடீரென புகைவந்தது. இது குறித்து டோல்பிளாசா ஊழியர்கள் எச்சரித்தவுடன் கொளஞ்சியப்பன் காரை உடனடியாக நிறுத்தினார்.