வழிப்பறி செய்த 3 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, டிச.9:தேன்கனிக்கோட்டை தாலுகா தளியில் உள்ள மைசூரு சாலையை சேர்ந்தவர் சயத்ஜமீர்(22). இவர் சங்கேப்பள்ளி கூட்ரோட்டில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த தளி மசூதி தெருவை சேர்ந்த பிலால்(19), தளி பி.டி.ஓ அலுவலகம் பின்புறம் வசித்து வரும் ரிஸ்வான்(24) மற்றும் பிரசாந்த்(19) ஆகிய மூன்று பேர் சயித்ஜமீரை மிரட்டி பைக், செல்போன், ₹7 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அதேபோல் தளி அருகே சூடசந்திரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனு(22), என்பவர் செல்போனை கொடுக்காததால் அவரை தாக்கினர். இதையடுத்து பிலால், ரிஸ்வான், பிரசாந்த் ஆகிய 3 பேரையும் தளி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: