விருத்தாசலம், டிச. 7: விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குவெள்ளூர் ஊராட்சியில் குடிநீர், சாலை, நீர்நிலைகள் தூர்வாரி தருவதாக என்.எல்.சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் என்எல்சி நிர்வாகம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராததால் ஆத்திரமடைந்த வடக்குவெள்ளூர், வெளிக்கூனங்குறிச்சி கிராம மக்கள் வருகின்ற 12ம் தேதி நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் இரண்டாம் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதையடுத்து விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் சுமூகமாக முடியாததால் 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.