தோகைமலை, டிச. 8: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமணி மகன் கதிர்வேல்(26). சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினர் தோகைமலை பகுதியை சேர்ந்த தீபா(25) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தனது தாய்வீடான தோகைமலைக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு தீபா சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி அன்று தாய் வீட்டில் இருந்த தீபா திடீர் என்று மாயமாகி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கதிர்வேல் உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் தீபா கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து கதிர்வேல் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.
கத்திரிக்காய் ரூ.80