குளித்தலை, ஆக. 1: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் தோணியம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இரண்டு கார் ஓட்டுநர்களும் லேசான காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கரூர் மற்றும் திருச்சிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திம்மாச்சிபுரம் பகுதியில் இருந்து கருப்பத்தூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி இப்பகுதியில் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
