புதுச்சேரி, டிச. 7: புதுச்சேரியில் நேற்று புதிதாக 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 1,322 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 6 பேர், காரைக்கால் - ஒருவர், மாகே - ஒருவர் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,875 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது.