விழுப்புரம், டிச. 3: விழுப்புரம் அருகே சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சேகர்(46), இவர் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று ராஜமுகமது என்பவரின் நிலத்தில் நெற்பயிர்களுக்கு மருந்து தெளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.