ஒரத்தநாடு, டிச.2: ஒரத்தநாடு அருகே குலமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படம் உடைக்கப்பட்டது குறித்து அதிமுக நிர்வாகிகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் திருஉருவபடம் உள்ளது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம் முன்னிலையில் அதிமுக நிர்வாகி துரைராஜ் (65) என்பவர் கதவில் பூட்டப்பட்டு இருந்த பூட்டை எடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை அடித்து உடைத்ததாக வேலாயுதம் மற்றும் துரைராஜ் ஆகியோர் மீது திமுக கிளை கழக செயலாளர் பாலகிருஷ்ணன் ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்துள்ளார்.