திருப்பூர், ஏப். 19: திருப்பூர் வாக்கு எண்ணிக்கை மையமான எல்ஆர்ஜி அரசு கலை கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்ட மன்றதொகுதிகளில் பதிவான வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையமான பல்லடம் ரோட்டில் உள்ள எல்ஆர்ஜி அரசு கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.