கும்பகோணம், ஏப்.15: திருப்பனந்தாள் அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு அவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பனந்தாள் அருகே சூரியனார் கோவில் காவிரி ஆற்றங்கரையில் பரமசிவன் கோயில் பகுதியில் முகம் வீங்கிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க உடல் அழுகிய ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் மாதவன் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.