ஏர்வாடி அருகே கார் டிரைவர் மீது தாக்குதல்

களக்காடு, ஏப்.15:  ஏர்வாடி அருகேயுள்ள திருவரங்கநேரி தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜவேல் (30), கார் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் சத்தியன், கேசவன்புதூர் முருகன் மகன் தனிஷ் ஆகியோர் மது அருந்தி வந்தனர். இதை ராஜவேல், அவர்களது வீட்டில் தெரிவித்தார். இதனால் ராஜவேல் மீது சத்தியனுக்கும், தனிஷ்க்கும் ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியன், தனிஷ் ஆகியோர் சேர்ந்து ராஜவேலை கம்பால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சத்தியன், தனிஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: