புதுக்கோட்டை, ஏப். 14: மருத்துவ சிகிச்சையின்போது ஓய்வு பெற்ற தனியார் அதிகாரி இறந்ததால், உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட மச்சுவாடி அருகே உள்ள சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (63). வேளாண்மை துறை ஓய்வுபெற்ற உதவி கணக்கு அலுவலர். இவர் நேற்று புதுக்கோட்டை பேராங்குளம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்வதற்காக சிகிச்சைக்காக சேர்ந்தார். டயாலிசிஸ் செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டால் தான் கணேசன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையை மூடி சீல் வைக்க வேண்டும், கணேசனின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.