திருவாரூர், ஏப்.13: வருகிற 25ம் தேதி மஹாவீர் ஜெயந்தி மற்றும் வருகிற மே 1ம்தேதி மேதினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஆகியவற்றை மூட வேண்டுமென திருவாரூர் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாவது : சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் ஆணையர் கடிதத்தில் அறிவுறுத்தியபடி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் எப்எல் 2 மற்றும் எப்எல் 3 உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் எதிர்வரும் 25.4.2021 (ஞாயிற்றுக்கிழமை) மஹாவீர் ஜெயந்தி மற்றும் 1.5.2021 (சனிக்கிழமை) மே தினம் ஆகிய இரண்டு நாட்களுக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.