பொன்னமராவதி,ஏப்.13: பொன்னமராவதியில் நீண்டகாலமாக மூடிக்கிடக்கும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க கட்டிடம் செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வந்தது. ஒரு சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் திடீரென இவை மூடப்பட்டது. மூடப்பட்டத்திறகான காரணம் அறிவிக்கப்படவில்லை. அங்கு வேலை செய்தவர்கள் படிப்படியாக மாற்றுப்பணிக்கு சென்றுவிட்டனர். இங்கு இருந்த மிஷின்களை ஏலம் விடப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.