மதுரை, ஏப். 13: மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஸ், நேற்று கோரிப்பாளையம், அரசரடி, நாகமலை புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் விசிட் செய்து, முகக்கவசம் அணியாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்தார். மேலும், முகக்கவசத்தை சரியாக அணியாமல் வாகனங்களில் வந்தவர்களிடம், ‘உங்களது நன்மைக்காக முகக்கவசம் அணிய வேண்டும். இதில், அலட்சியம் காட்டக்கூடாது’ என அறிவுறுரை கூறினார். பின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.