முத்துப்பேட்டை, ஏப்.10: முத்துப்பேட்டையில் கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே திருத்துறைப்பூண்டி சாலையோரத்தில் கூந்தபனை பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த பாரிஜாதகம் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோயில் கதவை பூட்டி சென்ற பூசாரி பாரிஜாதகம் நேற்று கோயிலை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.