பேராவூரணி, ஏப்.5: பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து, பேராவூரணி வேதாந்தம்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் தஞ்சை எம்பியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதை தம் வாழ்வின் நோக்கமாக கொண்டு செயல்படுபவர். பேராவூரணி அரசு கல்லூரி நகர் பகுதியில் அமையாமல் போக்குவரத்து வசதியற்ற கிராம பகுதியில் அமைந்துள்ளதால் மாணவிகள் பல்வேறு சிரமங்கள் அடைவதாக கூறினார்கள். அந்த கல்லூரியை பேராவூரணி நகர் பகுதியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.