சங்கரன்கோவில், ஏப். 3: சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து நேற்று மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தீவிர பிரசாரம் செய்தார். முன்னதாக சங்கரன்கோவில் வந்த கனிமொழி எம்பிக்கு பருவக்குடி எல்லையில் வரவேற்பு அளிக்கபட்டது. தொடர்ந்து சங்கரன்கோவில் தேரடி திடலுக்கு வந்த கனிமொழி அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் சங்கரன்கோவிலில் பூ விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்ட் தொழிற்சாலை அமைத்து இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். இளைஞர் சுயஉதவிகுழுக்கள் அமைக்கப்படும். ஸ்டாலின் முதல்வரானவுடன் விவசாயக்கடன், கல்விக்கடன், 5 பவுனுக்குள் உள்ள நகைக்கடன் ரத்து செய்யப்படும். முதியோர் பென்சன் ரூ.1500 வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் சங்கரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜாதலைவர், லாலாசங்கரபாண்டியன், கடற்கரை வெற்றிவிஜயன்,