கிருஷ்ணகிரி, ஏப்.3: கிருஷ்ணகிரி அருகே குறைந்த மின்னழுத்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட தானம்பட்டி சாலை, சாமி நகர், பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த பல மாதங்களாக குறைந்த மின்னழுத்த சப்ளை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் டிவி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தண்ணீர் மோட்டார்கள் பழுதாகியும், ஏ.சி., உள்ளிட்டவைகள் பல நேரங்களில் வேலை செய்யாமலும் உள்ளது. 103-160 வோல்ட் மின்சாரம் மட்டுமே வருவதால் மின்சாரம் போதுமானதாக இல்லை.