ஊட்டி, ஏப். 1: ஊட்டி பாலாடா அருகேயுள்ள செலவிப் நகர் கிராமத்திற்கு ேபாதிய நடைபாதை வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பாலாடா, செலவிப் நகர் கிராமம் உள்ளது. அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்க கூடிய ெபாதுமக்கள் காய்கறி மற்றும் ேதயிலை தோட்டங்களுக்கும், கட்டுமான பணிகளுக்கும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் நடைபாதை, குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.