திருப்புத்தூர், மார்ச் 31: சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னால் இயன்ற பணிகளை தொகுதி மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் மனநிறைவோடு செய்திருக்கிறேன் என, திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார். திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ சிங்கம்புணரி ஒன்றிய கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மத்திய அரசை பொறுத்தவரையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற அரசாக மட்டுமே உள்ளது. தமிழ் மொழியை அழிக்கின்ற அரசாக உள்ளது. நீங்கள் என் மீது செலுத்துகின்ற அன்பிற்கு, காட்டுகின்ற ஆதரவுக்கு கைமாறு செய்வதற்காக காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். என்னை இரண்டு முறை வெற்றிபெற செய்தீர்கள். ஆனால் தமிழகத்தின் துரதிர்ஷ்டம் திமுக எதிர்க்கட்சியாக அமைந்தது.