அரியலூர், மார்ச் 30: அரியலூரில் மாவட்டத்தில், கழிச்சல் நோய் காரணமாக அதிகளவில் ஆடுகள் உயிரிழப்பதால் கால்நடை துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்கள், மேய்யச்சல் நிலங்கள் ஒட்டிய நீரோடை பகுதிகள் குக்கிராமங்களில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு அதிகளவில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது ஆடுகளுக்கு சளி பிடித்தும், காய்ச்சல், வாய் முதல் குடல் புண் ஏற்பட்டு, உணவு உண்ண முடியாமலும், கழிந்து, நிற்க கூட முடியாமல் சில நாட்களில் உயிரிழந்து விடுகின்றன. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ஆடுகளை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.