திருவாரூர், மார்ச் 26: தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூர் பகுதியில் தோட்டச்சேரி, கம்பர் தெரு, புளியங்குடி, அண்ணா காலணி, கமாலியா தெரு, குணுக்குடி, ஜமாலியா தெரு, ரஹ்மானியா தெரு, பண்டுதக்குடி, மரக்கடை, லெட்சுமாங்குடி கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி திமுக தலைமையிலான மக்களாட்சி அமைந்திட அனைவரும் உதயசூரியனுக்கு ஆதரவளிக்க வேண்டும். மேலும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு திமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.